வண்ணங்களால் பரிமாறிய பேரன்பு - கோவையில் வடமாநில தொழிலாளர்கள் ஹோலி கொண்டாட்டம்!

கோவையில் வடமாநிலத்தவரகள் அதிகம் வசிக்கும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாட்டப்பட்டது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வண்ணப்பொடிகளை பூசிக்கொண்டு உற்சாகமாக ஹோலியை கொண்டாடினர்.



கோவை: வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையை கோவையில் உள்ள வட மாநிலத்தவர்கள், வண்ணப்பொடிகளை ஒருவருக்கொருவர் பூசிக்கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.

வட இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான ஹோலிப் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒன்றாகும். இந்த பண்டிகையின்போது வண்ண பொடிகளை ஒருவருக்கொருவர் பூசி கொண்டு நடனமாடி பாடல்கள் பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.



இந்த ஹோலி பண்டிகை கோவையில் வட இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் இடங்களிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றாக கூடி ஒருவர் ஒருவர் வண்ண பொடிகளை பூசிக்கொண்டு விஷ்ணு கடவுளை வழிபட்டு பாடல்கள் பாடி பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்வர்.



அதன்படி கோவையில் வட இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் இன்று ஹோலிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வண்ணப் பணிகளை பூசிக்கொண்டு ஹோலியை கொண்டாடினர்.



குறிப்பாக விஷ்ணு கடவுளை முன்னிறுத்தி கொண்டாடப்படும் இந்த ஹோலி பண்டிகையில் சில குழந்தைகள் விஷ்ணுவைப்போல் வேடமணிந்து ஹோலி பண்டிகையை கொண்டாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...