உடுமலை அருகே மத்திய அரசை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி ஆர்ப்பாட்டம்!

100 நாள் வேலை திட்டத்திற்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை முடக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உடுமலை அடுத்த எலையமுத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மத்திய அரசை கண்டித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறது.

எலையமுத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளித்து சட்டத்தின் கீழ் வேலை உறுதி உரிமை அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்,



அரசு அறிவித்துள்ள சட்டக்கூலி 281லிருந்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தினமும் தொழிலாளர்களுக்கு கூலியை குறைக்காமல் வழங்க வேண்டும், ஊராட்சிகளில் வேலை கொடுப்பதில் சாதி பாகுபாடு காட்டி வேலைகளுக்கு செய்வதை கைவிட வேண்டும்.



அனைவருக்கும் சமமான வேலை வழங்க வேண்டும். பணி தளத்திற்கு காலை 8 மணிக்கு வந்து விட வேண்டும் என்று கடுமையாக நிர்பந்திப்பதை கைவிட்டு 9 மணிக்கு வரவேண்டும் என்பதை நியாயமாக உறுதிப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எலையமுத்தூர் தம்பிராஜ். சையத். மருதமுத்து. வெங்கடாசலம். மற்றும் தாலூகா நிர்வாகிகள். செளந்தரராஜன். சி.சுப்பிரமணியம். கிருஷ்ணசாமி. ராஜேந்திரன் உள்ளிட்ட ‌பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...