தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோக்கள் வெளியிட்ட விவகாரத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவரை செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியது. இது பீகார் சட்டப்பேரவை வரை எதிரொலித்து பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பியது.
இதையடுத்து, தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதேபோல், பீகார் மாநிலத்திலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 10 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் புலம்பெயர் வடமாநிலத்தவர்கள் கொல்லப்படுவதாக வதந்தி பரப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில ஏடிஜிபி ஜிதேந்திர சிங் கங்காவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் சிக்கிய உத்தரபிரதேச மாநில பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாராவ், பத்து நாட்களுக்குள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, முன்ஜாமீன் உள்ளிட்ட நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் யாதவ் என்ற நபர் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் அடுத்தடுத்து நிகழும் கைது நடவடிக்கைகள் மற்றும் அரசியல் கட்சியினரின் கண்டனங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கிவருகிறது.
இதையடுத்து, தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதேபோல், பீகார் மாநிலத்திலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 10 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் புலம்பெயர் வடமாநிலத்தவர்கள் கொல்லப்படுவதாக வதந்தி பரப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில ஏடிஜிபி ஜிதேந்திர சிங் கங்காவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் சிக்கிய உத்தரபிரதேச மாநில பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாராவ், பத்து நாட்களுக்குள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, முன்ஜாமீன் உள்ளிட்ட நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் யாதவ் என்ற நபர் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் அடுத்தடுத்து நிகழும் கைது நடவடிக்கைகள் மற்றும் அரசியல் கட்சியினரின் கண்டனங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கிவருகிறது.