வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம் - செங்கல்பட்டில் தங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலத்தவர் கைது

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோக்கள் வெளியிட்ட விவகாரத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவரை செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் போலீசார் கைது செய்தனர்.


தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியது. இது பீகார் சட்டப்பேரவை வரை எதிரொலித்து பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பியது.

இதையடுத்து, தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதேபோல், பீகார் மாநிலத்திலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 10 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் புலம்பெயர் வடமாநிலத்தவர்கள் கொல்லப்படுவதாக வதந்தி பரப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில ஏடிஜிபி ஜிதேந்திர சிங் கங்காவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் சிக்கிய உத்தரபிரதேச மாநில பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாராவ், பத்து நாட்களுக்குள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, முன்ஜாமீன் உள்ளிட்ட நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.



இந்த நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் யாதவ் என்ற நபர் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் அடுத்தடுத்து நிகழும் கைது நடவடிக்கைகள் மற்றும் அரசியல் கட்சியினரின் கண்டனங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கிவருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...