ரவுடி சுட்டதால் தற்காப்புக்காக போலீசார் சுட வேண்டியதாகிவிட்டது..! - கோவை துணை ஆணையர் சந்தீஸ் விளக்கம்

கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் இன்று காலை கைதி- போலீசார் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தை மாநகர காவல்துறை துணை ஆணையர் சந்தீஸ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ரவுடி சஞ்சய் ராஜா மறைத்து வைத்திருந்த துப்பாக்கி, நாட்டு துப்பாக்கி போல இருப்பதாக துணை ஆணையர் சந்தீஸ் தெரிவித்தார்.



கோவை: கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் இன்று காலை கைதி- போலீசார் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தை மாநகர காவல்துறை துணை ஆணையர் சந்தீஸ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



இன்று காலை சஞ்சய் ராஜாவை கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை இந்த பகுதிக்கு அழைத்து வந்தனர். சஞ்சய்ராஜாவிடம் இரண்டு துப்பாக்கிகள் இருப்பதாக விசாரணையில் சொல்லியிருந்தார். ஏற்கனவே ஒரு துப்பாக்கி சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டாவது துப்பாக்கியை பறிமுதல் செய்ய இங்கே அழைத்து வந்திந்தனர்.

சரவணம்பட்டி பகுதியில்தான் சஞ்சய் ராஜா தங்கி இருப்பார். இந்த பகுதியில் மறைத்து வைத்திருந்ததாக சொன்னதால் அந்தத் துப்பாக்கியை பறிமுதல் செய்ய அவரை அழைத்து வந்தனர். இந்த துப்பாக்கி நாட்டுத் துப்பாக்கியைப்போல இருக்கிறது.



மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தவுடன் சுடத் துவங்கி விட்டார்.



தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் சுட்டதில் சஞ்சய்ராஜா காலில் குண்டு பாய்ந்தது.



அவர் பத்து நிமிடத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லபட்டார். தற்போது நல்ல நிலையில் இருக்கிறார். போலீசாரை குறிவைத்து சுட்டார். நல்வாய்ப்பாக போலீசார் தப்பி விட்டனர்.



சஞ்சய் ராஜா மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் இருக்கிறது.

துப்பாக்கி எங்கு வாங்கினார் என்பது குறித்து விசாரித்த பொழுது பீகார், ஒரிசா என சொல்லியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கோவையில் துப்பாக்கி கலாச்சாரம் கிடையாது. இவர் அதை செய்து வந்து இருக்கிறார்.

இந்த துப்பாக்கி நாட்டு துப்பாக்கியை போலவே இருக்கிறது. இன்னொரு துப்பாக்கி சற்று மாறுதலாக இருக்கிறது. அதை ஆய்வுக்கு அனுப்பினால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். இவை சட்ட விரோதமான துப்பாக்கிகள். துப்பாக்கியில் எவ்வளவு குண்டுகள் இருக்கிறது என்பது ஆய்வுக்கு பின்னரே தெரியவரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...