கோவையில் இளைஞரிடம் பர்ஸ் பறிப்பு - கேரளாவை சேர்ந்த ஒருவர் கைது!

கோவை காந்திபுரத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெரியசாமி என்பவரின் பர்சை திருடிக்கொண்டு கேரள கூலித்தொழிலாளி மாரிமுத்து தப்பியோடினார். பொதுமக்கள் உதவியுடன் மாரிமுத்துவை விரட்டிப்பிடித்து காவல்நிலையத்தில் பெரியசாமி ஒப்படைத்தார். மாரிமுத்து பறித்து சென்ற பர்சிலிருந்த 8,000 ரூபாய் பணம் பத்திரமாக மீட்கப்பட்டது.


கோவை: திருச்சி மணப்பாறை நவகுடி கிராம பகுதியைச் சார்ந்தவர் பெரியசாமி (வயது29). இவர் பேக்கரி ஒன்றில் காசாளராக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே ஈரோடு செல்கின்ற பேருந்தில் செல்வதற்காக அவர் நின்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்கிருந்த நபர் ஒருவர், பெரியசாமி பர்சை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். உடனடியாக அவரை பின்னால் துரத்திய பெரியசாமி பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் பர்ஸை பறித்துக் கொண்டு தப்பி ஓடியவர் மாரிமுத்து (வயது44) என்பது தெரிய வந்தது. கேரளாவைச் சார்ந்த இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து, மாரிமுத்து மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மாரிமுத்து பறித்து சென்ற பர்சிலிருந்த 8,000 ரூபாய் பணம் பத்திரமாக மீட்கப்பட்டது. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பெருமளவிலான மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட விரட்டிப் பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...