கோவையில் இளைஞரிடம் பர்ஸ் பறிப்பு - கேரளாவை சேர்ந்த ஒருவர் கைது!

கோவை காந்திபுரத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெரியசாமி என்பவரின் பர்சை திருடிக்கொண்டு கேரள கூலித்தொழிலாளி மாரிமுத்து தப்பியோடினார். பொதுமக்கள் உதவியுடன் மாரிமுத்துவை விரட்டிப்பிடித்து காவல்நிலையத்தில் பெரியசாமி ஒப்படைத்தார். மாரிமுத்து பறித்து சென்ற பர்சிலிருந்த 8,000 ரூபாய் பணம் பத்திரமாக மீட்கப்பட்டது.


கோவை: திருச்சி மணப்பாறை நவகுடி கிராம பகுதியைச் சார்ந்தவர் பெரியசாமி (வயது29). இவர் பேக்கரி ஒன்றில் காசாளராக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே ஈரோடு செல்கின்ற பேருந்தில் செல்வதற்காக அவர் நின்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்கிருந்த நபர் ஒருவர், பெரியசாமி பர்சை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். உடனடியாக அவரை பின்னால் துரத்திய பெரியசாமி பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் பர்ஸை பறித்துக் கொண்டு தப்பி ஓடியவர் மாரிமுத்து (வயது44) என்பது தெரிய வந்தது. கேரளாவைச் சார்ந்த இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து, மாரிமுத்து மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மாரிமுத்து பறித்து சென்ற பர்சிலிருந்த 8,000 ரூபாய் பணம் பத்திரமாக மீட்கப்பட்டது. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பெருமளவிலான மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட விரட்டிப் பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...