முதல்வர் 70வது பிறந்தநாள் விழா - கோவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கிய திமுகவினர்!

கோவை குருடம்பாளையம் 12வது வார்டு திமுக சார்பில் பழனி கவுண்டன்பதூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மாணவ - மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், எழுதுபொருட்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கோவை பழனி கவுண்டன்பதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாளை திமுகவினர் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 12வது வார்டு திமுக கிளைக் கழகம் சார்பாக கோவை துடியலூர் அடுத்த பழனி கவுண்டம்புதூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் எழுதுபொருட்கள் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக், ஒன்றிய குழு உறுப்பினர் ஆறுச்சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரவணகுமார், குருடம்பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் வசந்தாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், எழுதுபொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.



மேலும் பள்ளி நூலகத்துக்கு தேவையான புத்தகங்களை ஆசிரியர்களிடம் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் 12 வது வார்டு அவைத் தலைவர் முருகேஷ், செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் சிவக்குமார், துணைத் தலைவர் சாமுவேல், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மருதாசலமூர்த்தி, மாணவர் அணி ஞானசேகர், கிளைக் கழக நிர்வாகி சிவகாமி, பானு, பொன்னுசாமி, நிர்வாக பொறுப்பாளர்கள் சக்திவேல், ரமேஷ்பாபு, அஸ்கர் அலி, தினேஷ், சாமுவேல், அஸ்வின், கார்த்தி, கிருஷ்ணசுதா, நாககுமார், மாவட்ட ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் நாகசாகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...