முதல்வர் 70வது பிறந்தநாள் விழா - கோவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கிய திமுகவினர்!

கோவை குருடம்பாளையம் 12வது வார்டு திமுக சார்பில் பழனி கவுண்டன்பதூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மாணவ - மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், எழுதுபொருட்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கோவை பழனி கவுண்டன்பதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாளை திமுகவினர் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 12வது வார்டு திமுக கிளைக் கழகம் சார்பாக கோவை துடியலூர் அடுத்த பழனி கவுண்டம்புதூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் எழுதுபொருட்கள் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக், ஒன்றிய குழு உறுப்பினர் ஆறுச்சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரவணகுமார், குருடம்பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் வசந்தாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், எழுதுபொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.



மேலும் பள்ளி நூலகத்துக்கு தேவையான புத்தகங்களை ஆசிரியர்களிடம் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் 12 வது வார்டு அவைத் தலைவர் முருகேஷ், செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் சிவக்குமார், துணைத் தலைவர் சாமுவேல், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மருதாசலமூர்த்தி, மாணவர் அணி ஞானசேகர், கிளைக் கழக நிர்வாகி சிவகாமி, பானு, பொன்னுசாமி, நிர்வாக பொறுப்பாளர்கள் சக்திவேல், ரமேஷ்பாபு, அஸ்கர் அலி, தினேஷ், சாமுவேல், அஸ்வின், கார்த்தி, கிருஷ்ணசுதா, நாககுமார், மாவட்ட ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் நாகசாகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...