கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்த மயில்கள் - வனத்துறை விசாரிக்க கோரிக்கை

கோவை டாடாபாத் பகுதியில் இரண்டு மயில்கள் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளித்தும் விசாரணை நடத்தவில்லை என்றும், மயில்கள் கடந்த சில நாட்களாக சமூக விரோதிகளால் வேட்டையாடப்படும் நிலையில், உரிய விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகம் அருகே மயில்கள் இறந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் வனத்துறையினருக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் இரண்டு மயில்கள் இறந்து கிடந்துள்ளன. அதில் ஒரு மயிலை நாய்கள் தூக்கிச் சென்றிருக்கின்றன. இந்நிலையில் மயில்கள் இறப்பு குறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளித்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இறந்த மயில்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததா? அல்லது வேட்டையாடப்பட்டதா? என்பது குறித்து வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு மருந்துக்காகவும், இறைச்சிக்காகவும் சமூக விரோதிகளால் மயில்கள் வேட்டையாடப்பட்ட சம்பவமும் கோவையில் அரங்கேறி உள்ளது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...