உடுமலை பத்ரகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண விழா - பக்தர்கள் சாமி தரிசனம்!

உடுமலை அடுத்த சங்கிலி வீதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. சூலத்தேவருடன் திருக்கல்யாண அலங்காரத்தில் அருள் பாலித்த பத்ரகாளி அம்மனை திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

உடுமலை அடுத்த சங்கிலி வீதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த 21ஆம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த துவக்க விழாவின் போது, கருப்பண்ணசாமி பூஜை, திருமூர்த்தி மலையிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கொடியேற்றுதல், காப்புக் கட்டுதல், கும்பம், பூவோடு எடுத்து வருதல், மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபாடு, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் திருக்கல்யாணம் இன்றுநடைபெற்றது. பிரசன்ன விநாயகர் திருக்கோயில் அர்ச்சகர் கிரிவாச பகவதி சிவாச்சாரியார் தலைமையில் ஐயப்பன் கோவில் அர்ச்சகர் சுந்தரமூர்த்தி, பத்ரகாளியம்மன் கோவில் அர்ச்சகர் ஹரிவார சிவம், பரம்பரை கௌரவ பூசாரி முருகானந்தம், உடுமலை டாக்டர் சிவக்கனி சுபாஷ் ஆகியோர் முன்னிலையில் வெகு விமர்சையாக நடந்தது.



சூலத்தேவருடன் திருக்கல்யாண அலங்காரத்தில் அருள் பாலித்த பத்ரகாளி அம்மனை திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பரிவட்டம் கட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாதஸ்வர மேளதாளம், கேரள செண்டை மேளம் முழங்க அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. சங்கிலி வீதி, அமணலிங்க வீதி, மற்றும் சதாசிவம் வீதி வழியாக குட்டை திடலை அடைந்தது. அங்கு வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைதொடர்ந்து இன்று மாலை கொடி இறக்குதல், கும்பம் விடுதல், நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிலையில், நாளை மாலை 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகமும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...