உடுமலை பத்ரகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண விழா - பக்தர்கள் சாமி தரிசனம்!

உடுமலை அடுத்த சங்கிலி வீதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. சூலத்தேவருடன் திருக்கல்யாண அலங்காரத்தில் அருள் பாலித்த பத்ரகாளி அம்மனை திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

உடுமலை அடுத்த சங்கிலி வீதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த 21ஆம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த துவக்க விழாவின் போது, கருப்பண்ணசாமி பூஜை, திருமூர்த்தி மலையிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கொடியேற்றுதல், காப்புக் கட்டுதல், கும்பம், பூவோடு எடுத்து வருதல், மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபாடு, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் திருக்கல்யாணம் இன்றுநடைபெற்றது. பிரசன்ன விநாயகர் திருக்கோயில் அர்ச்சகர் கிரிவாச பகவதி சிவாச்சாரியார் தலைமையில் ஐயப்பன் கோவில் அர்ச்சகர் சுந்தரமூர்த்தி, பத்ரகாளியம்மன் கோவில் அர்ச்சகர் ஹரிவார சிவம், பரம்பரை கௌரவ பூசாரி முருகானந்தம், உடுமலை டாக்டர் சிவக்கனி சுபாஷ் ஆகியோர் முன்னிலையில் வெகு விமர்சையாக நடந்தது.



சூலத்தேவருடன் திருக்கல்யாண அலங்காரத்தில் அருள் பாலித்த பத்ரகாளி அம்மனை திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பரிவட்டம் கட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாதஸ்வர மேளதாளம், கேரள செண்டை மேளம் முழங்க அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. சங்கிலி வீதி, அமணலிங்க வீதி, மற்றும் சதாசிவம் வீதி வழியாக குட்டை திடலை அடைந்தது. அங்கு வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைதொடர்ந்து இன்று மாலை கொடி இறக்குதல், கும்பம் விடுதல், நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிலையில், நாளை மாலை 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகமும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...