கோவையில் இருந்து கேரளா செல்லும் அனைத்து சாலைகளையும் மறித்து மார்ச் 12-யில் போராட்டம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா அரசைக் கண்டித்து வருகிற மார்ச் 12- ஆம் தேதியன்று கோவையில் இருந்து கேரளா செல்லும் அனைத்து சாலைகளையும் மறித்து போராட்டம் நடத்த இருப்பதாக கோவையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள எல்லைக்குள் 6 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகின்றது.

அதில் பாலக்காடு மாவட்டம் தேக்குவட்டை என்ற இடத்தில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் மஞ்சகண்டி உள்ளிட்ட மற்ற இடங்களில் தடுப்பு அணைகள் கட்டும் பணியினை துரிதப்படுத்தியுள்ளது.

இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் விவசாயம் மட்டுமில்லாது குடிநீர் தட்டுபாடும் மிக பெரிய அளவில் ஏற்படும் என்பதால் கேரளா அரசு தடுப்பணைகள் கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்துள்ளது.

இந்த சூழலில் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக, தந்தை பெரியார் திராவிட கழகம், கொங்கு ஜனநாயக கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்பட விவசாயிகள் கூட்டமைப்பு ஆகியவை பங்கேற்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் சுப்பு லட்சுமி ஜெகதீசன், முத்துச்சாமி, தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன் கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் வழித்தடமான க.க.சாவடியை மறித்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி வருகிற மார்ச் 12 ஆம் தேதி கோவையில் இருந்து கேரளா செல்லும் அனைத்து சாலைகளை மறித்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...