கோவையில் பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு - ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்!

கோவை செட்டிப்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில், அமில வீச்சினால் பாதிக்கப்படுபவர்களுக்கான சட்ட உதவி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கோவை: கோவை செட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் செட்டிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



இந்த முகாமில், கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான கே.எஸ்.எஸ்.சிவா, பள்ளி மாணவர்களுடன் உரையாடி சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.



குறிப்பாக அமில வீச்சினால் கடுமையாக பாதிக்கப்படும் நபர்களுக்கு செய்யப்படும் சட்டப் பணிகள் உதவி மற்றும் இதர சட்ட உதவிகள் குறித்து மாணாக்கர்களிடம் எடுத்துரைத்தார்.

கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சேரன், ஓசூர் சட்டம் மற்றும் பொதுத்தேர்வு குறித்த உளவியல் ஆலோசனைகள் குறித்து விளக்கினார். குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்தும் இந்த முகாமில் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

செட்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சேரன், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் பங்கேற்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...