தாராபுரம் அமராவதி ஆற்றில் 2 தடுப்பணைகள் - கட்டுமான பணியை துவக்கி வைத்த அமைச்சர்கள்!

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ.21 கோடி மதிப்பீட்டில் 2 தடுப்பணைகள் கட்டும் பணியை தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் தடுப்பணைகள் கட்டும் பணியை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

தாராபுரம் வழியாக செல்லும் அமராவதி ஆற்றில் தடுப்பணைகளை கட்டி தொகுதிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளின் விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது தொகுதி சார்ந்த கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது.



இந்நிலையில், கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர தமிழ்நாடு அரசு முழு ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் மாம்பாடி ஊராட்சி புங்கன் துறை அருகே செல்லும் அமராவதி ஆற்றிலும், கொளத்துப்பாளையம் பேரூராட்சி கவுண்டன் வலசு கிராமத்தின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றிலும் தடுப்பணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தலா 10 கோடியே 70 லட்சம் செலவில் மொத்தம் இரண்டு அணைகளுக்கும் சேர்ந்து 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் தடுப்பணைகள் கட்டும் பணியின் துவக்க விழா இன்று நடைபெற்றது.



இந்த விழாவில், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி பூமிபூஜை செய்து கட்டுமான பணிகளை துவக்கி வைத்தனர்.



இந்த நிகழ்வில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...