வீடியோக்கள் போலியானது என்று வடமாநில தொழிலாளர்கள் உணர்ந்துள்ளனர்..! - பீகார் மாநில ஆய்வு குழு தகவல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பின் பேசிய பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலாளர் பாலமுருகன், இணையத்தில் வைரலான வீடியோக்கள், தமிழகத்தில் நடந்தது அல்ல என்பதை வடமாநில தொழிலாளர்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.



கோவை: வடமாநில இளைஞர் தாக்கப்படுவதாக பரவிய வீடியோ தமிழகத்தில் நடந்தது இல்லை என்ற உண்மையை வடமாநில தொழிலாளர்கள் புரிந்து கொண்டுள்ளனர் என பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக வடமாநிலத்தவர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பீகார் மாநில அரசின் குழுவினர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தொழில்துறையினருடன் ஆய்வு கூட்டம் நடத்தியது.

ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களை சந்தித்த பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலாளர் பாலமுருகன் பேசியதாவது,





இன்று காலையில் இருந்து கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் பீகார் மாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடினோம்.

முக்கியமாகசமூக வலைத்தளங்களில் வெளியான சில வீடியோக்கள், அதன் மூலம் பொய்யான தகவல்களும் பரப்பப்பட்டது. அந்த வீடியோ மற்றும் தகவல்களை பார்த்து வடமாநில தொழிலாளர்கள் இடையே அச்சம் இருந்தது. அந்த தகவல் பொய்யானது என தொழிலாளர்களிடத்தில் எடுத்துக் கூறினோம்.



தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தொழில் துறையினருடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு அவர்களது கருத்துக்களையும் பெற்றுள்ளோம். அந்த வீடியோக்களால் தொழிலாளர்கள் இடையே சிறிது அச்சம் இருந்தது.

மாவட்ட நிர்வாகமும் காவல்துறை நிர்வாகமும் சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள். இதன் மூலம் அந்த தகவல்கள் பீகார் தொழிலாளர்களுக்கு நடந்த சம்பவம் இல்லை என இங்குள்ள தொழிலாளர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...