பொள்ளாச்சி அருகே தோட்டத்தில் புகுந்த 6 அடி நீள மலைப்பாம்பு - பத்திரமாக மீட்ட வனத்துறை!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே புளியங்கண்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் பதுங்கியிருந்த 6 அடி நீள மலைப்பாம்பை, வேட்டை தடுப்பு காவலர் சக்திவேல் லாவகமாக பிடித்தார். பின்னர் பாம்பு, ஆழியார் அருகே உள்ள வனப்பகுதிக்குள் விடப்பட்டது.



கோவை: பொள்ளாச்சி அடுத்த புளியங்கண்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்கள் வேலை செய்த பகுதியில் மலைப்பாம்பு பதுங்கியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



இது குறித்து தோட்டத்து உரிமையாளருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், தோட்டத்து உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.



பின்னர் அங்கு விரைந்து வந்த வனத்துறை வேட்டை தடுப்பு காவலர் சக்திவேல் என்பவர் சுமார் ஆறு அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்தார்.

இதையடுத்து, அந்த மலைபாம்பு ஆழியார் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...