150 கிராம் தங்கத்தோடு வடமாநில இளைஞர் தப்பியோட்டம் - கோவை போலீசார் விசாரணை!

கோவையில் ரகுகுமார் என்ற தங்க பட்டறை உரிமையாளரிடம் ஆபரணங்கள் செய்வதற்காகப் பெற்ற 150 கிராம் தங்கத்துடன் தப்பியோடிய மேற்கு வங்கத்தை சேர்ந்த பாபன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரகு குமார் (வயது45). இவர் பொன்னையராஜபுரம் பகுதியில் தங்க பட்டறை நடத்தி வருகின்றார். இவரிடம் கடந்த ஐந்து வருடங்களாக பாபன் என்ற நபர் பணியாற்றி வந்தார். மேற்கு வங்கத்தைச் சார்ந்த இவர், ரகுகுமார் தரும் தங்க உலோகத்தை ஆபரணமாக மாற்றி தருவது இவரது பணி.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 7 லட்சம் மதிப்பிலான 150 கிராம் எடையுள்ள தங்கத்தை கொடுத்து தோடு மற்றும் கம்மல் செய்து தர கேட்டுள்ளார்.

ரகுகுமாரிடம் அந்த தங்க உலோகத்தைப் பெற்றுக் கொண்ட பாபன், தங்க நகை ஆபரணங்கள் செய்யாமல், தனது சொந்த ஊருக்கு தங்கத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து ரகுகுமார் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாபனை தேடி வருகின்றனர். தங்க நகை பட்டறையில் வேலை செய்யும் வட மாநிலத்தவர்கள் சில நேரங்களில் தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி ஓடுவது கோவையில் தொடர் கதையாகி வருவது தங்கப்பட்டறை உரிமையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...