சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் - வால்பாறையில் போக்குவரத்து பாதிப்பு!

கோவை வால்பாறையில் கடைகள் அதிகமுள்ள அண்ணாசிலை, காந்திசிலை பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அனுமதியின்றி நிறுத்தப்படுவதாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய சாலை அமைக்கும் பணி நிறைவடைந்தது. வால்பாறை அண்ணா சிலை பகுதியில் இருந்து காந்தி சிலை பகுதி வரை கடைகள் அதிகம் உள்ளது. அங்கு பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் வாகனத்தில் வந்தால் வாகனத்தை கடை முன்பு நிறுத்திவிட்டு செல்கின்றனர்.



மேலும், வால்பாறை பகுதியில் சுற்றுலா வரும் மக்களும் வாகனங்களை சாலை ஓரம் நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே, வால்பாறையில் வாகனங்களை நிறுத்துவதற்காக பார்க்கிங் அமைத்துத்தர வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



புதிய சாலை அமைத்து பின்பு சாலையின் இரு புறங்களிலும் வெள்ளைகோடு போடவும், சாலையின் நடுவே வெள்ளை கோடு அமைக்கவும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...