சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் - வால்பாறையில் போக்குவரத்து பாதிப்பு!

கோவை வால்பாறையில் கடைகள் அதிகமுள்ள அண்ணாசிலை, காந்திசிலை பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அனுமதியின்றி நிறுத்தப்படுவதாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய சாலை அமைக்கும் பணி நிறைவடைந்தது. வால்பாறை அண்ணா சிலை பகுதியில் இருந்து காந்தி சிலை பகுதி வரை கடைகள் அதிகம் உள்ளது. அங்கு பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் வாகனத்தில் வந்தால் வாகனத்தை கடை முன்பு நிறுத்திவிட்டு செல்கின்றனர்.



மேலும், வால்பாறை பகுதியில் சுற்றுலா வரும் மக்களும் வாகனங்களை சாலை ஓரம் நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே, வால்பாறையில் வாகனங்களை நிறுத்துவதற்காக பார்க்கிங் அமைத்துத்தர வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



புதிய சாலை அமைத்து பின்பு சாலையின் இரு புறங்களிலும் வெள்ளைகோடு போடவும், சாலையின் நடுவே வெள்ளை கோடு அமைக்கவும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...