கோவையில் லாரி பேட்டரி திருடிய இளைஞர் கைது - கூட்டாளிகளுக்கு போலீஸ் வலை!

கோவை ஆத்துபாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜபாருல்லா என்பவரின் லாரியில் பேட்டரி திருடிய ரிஸ்வான் சுகைல் என்பவரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்து, தப்பியோடிய 2 பேரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.



கோவை: கோவை குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜபாருல்லா சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவர் தனது லாரியை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைத்து இருந்தார். இவரது லாரியில் இருந்து சிலர் பொருட்களை திருடுவதாக ஜபாருல்லாவுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தமது நண்பர்களுடன் அவர் அங்கு விரைந்து சென்று பார்த்தார். அப்பொழுது மூன்றுபேர் லாரியில் இருந்து பேட்டரியை திருடிக் கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்களை ஜபாருல்லா பிடிக்க முயன்றார். அப்பொழுது, ஒருவர் மட்டும் சிக்கிக் கொண்டார். மற்ற இரண்டு பேரும் தப்பி ஓடிவிட்டனர்.



இதை அடுத்து அவரை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஜபாருல்லா ஒப்படைத்தார். விசாரணையில், அந்த நபர் கரும்பு கடையைச் சேர்ந்த ரிஸ்வான் சுகைல் என்பதும், இவர் தனது நண்பர்கள் முகமது ஷெரீப், அப்சல் ரகுமான் ஆகியோருடன் சேர்ந்து லாரியில் இருந்து பேட்டரியை திருடி விற்க முயன்றதும் தெரியவந்தது.

இதை அடுத்து ரிஸ்வான் சுகைலை போலீசார் கைது செய்ததோடு, தப்பி ஓடிய 2 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...