கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்ட காட்டு தீ அணைப்பு - மீண்டும் மலையேற பக்தர்களுக்கு அனுமதி

கோவை வெள்ளியங்கிரி மலையில் நேற்று மாலை ஏற்பட்ட காட்டுத்தீயை வனத்துறை, தீயணைப்பு துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து இரவு முழுதும் போராடி தீயை கட்டுப்படுத்திய நிலையில், இன்று பிற்பகல் முதல் பக்தர்கள் மலையேற அனுமதி.


கோவை: வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்ட காட்டு தீ அணைக்கப்பட்டதால் மீண்டும் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர்.

கோவை மாவட்டம் பூண்டி வெள்ளியங்கிரி மலை தொடரில் 4 மற்றும் 5 ஆவது மலையில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் பழங்குடி கிராம மக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் காரணமாக பக்தர்கள் செல்லும் பாதையின் அருகே காட்டு தீ ஏற்பட்டதால் சனிக்கிழமை மாலையில் இருந்து பக்தர்கள் மேலே செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் மலைக்கு சென்றவர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதனிடையே இரவு முழுவதும் போராடி இன்று அதிகாலை 4 மணியளவில் காட்டு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் முதல், பக்தர்கள் வழக்கம் போல வெள்ளியங்கிரி மலையில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பக்தர்கள் மேலே எடுத்துச் செல்கிறார்களா என்பதையும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...