கோவையில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 70வது ஜோடிகளுக்கு திருமணம் - அமைச்சர் உதயநிதி பங்கேற்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக கோவை அவினாசி சாலையில் தனியார் அரங்கில் திமுக சார்பில் 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.



கோவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட திமுக சார்பில் 70வது ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமானமு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் கூறியது போல, ஏழை எளிய மக்களுக்கு உதவுகின்ற வகையில் பிறந்தநாள் கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் 70வது ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கோவை - அவினாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.



புதுமண தம்பதிகள் மற்றும் உறவினர்களுடன் தனித்தனியாகப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு புதுமண தம்பதிகளுக்கு ஸ்மார்ட் வாட்ச்சை பரிசாக அளித்தார்.



மேலும் 70 ஜோடிகளுக்கும் கல்யாண சீர் வரிசைகள் மற்றும் டிவி, மிக்சி, குளிர்சாதனப் பெட்டி, நாற்காலிகள் மற்றும் மின்சார அடுப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...