கோவை வெள்ளியங்கிரி மலையில் காட்டூத்தீ - 2வது நாளாக அணைக்கும் பணியில் வனத்துறை தீவிரம்!

கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலைத்தொடரின் 4 மற்றும் 5வது மலைகளுக்கு இடையேயான வனப்பகுதியில் காட்டுத்தீ பரவிய நிலையில், பொதுமக்கள் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் 2வது நாளாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத்துறையினர், பழங்குடி மக்கள் உதவியுடன் அணைக்கும் பணியில் இரண்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலைத் தொடரின் 4 மற்றும் 5ஆவது மலைகளுக்கு இடையே உள்ள வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டு தீ ஏற்பட்டது. சுமார் 3ஹெக்டர் பரப்பளவில் பரவிய தீயினை சுமார் 30-க்கும் மேற்பட்ட போளுவாம்பட்டி வனத்துறை ஊழியர்கள், உள்ளூர் பழங்குடி மக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியைத் துவங்கினர்.



தற்போது வெள்ளியங்கிரி மலைக்குப் பக்தர்கள் சென்று வரும் சூழலில் 7ஆவது மலையிலிருந்து சுவாமி தரிசனம் முடித்து கீழே வரும் பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் சிக்கியுள்ளனர். மேலும் காட்டு தீ காரணமாக வெள்ளியங்கிரி நுழைவு வாயிலிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

மேலும் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரவு முழுவதும் போராடி 4ஆவது மலையில் பிடித்திருந்த தீயை முழுமையாக அணைத்தனர். இதனிடையே தீயணைப்புத் துறையினரும் வெள்ளியங்கிரி மலையின் 5ஆவது மலையில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியை இரண்டாவது நாளாக தீவிரப்படுத்தியுள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...