கோவை வெள்ளியங்கிரி மலையில் காட்டூத்தீ - 2வது நாளாக அணைக்கும் பணியில் வனத்துறை தீவிரம்!

கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலைத்தொடரின் 4 மற்றும் 5வது மலைகளுக்கு இடையேயான வனப்பகுதியில் காட்டுத்தீ பரவிய நிலையில், பொதுமக்கள் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் 2வது நாளாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத்துறையினர், பழங்குடி மக்கள் உதவியுடன் அணைக்கும் பணியில் இரண்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலைத் தொடரின் 4 மற்றும் 5ஆவது மலைகளுக்கு இடையே உள்ள வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டு தீ ஏற்பட்டது. சுமார் 3ஹெக்டர் பரப்பளவில் பரவிய தீயினை சுமார் 30-க்கும் மேற்பட்ட போளுவாம்பட்டி வனத்துறை ஊழியர்கள், உள்ளூர் பழங்குடி மக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியைத் துவங்கினர்.



தற்போது வெள்ளியங்கிரி மலைக்குப் பக்தர்கள் சென்று வரும் சூழலில் 7ஆவது மலையிலிருந்து சுவாமி தரிசனம் முடித்து கீழே வரும் பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் சிக்கியுள்ளனர். மேலும் காட்டு தீ காரணமாக வெள்ளியங்கிரி நுழைவு வாயிலிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

மேலும் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரவு முழுவதும் போராடி 4ஆவது மலையில் பிடித்திருந்த தீயை முழுமையாக அணைத்தனர். இதனிடையே தீயணைப்புத் துறையினரும் வெள்ளியங்கிரி மலையின் 5ஆவது மலையில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியை இரண்டாவது நாளாக தீவிரப்படுத்தியுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...