கோவையில் பேங்க் ஆப் இந்தியா சார்பில் மாரத்தான் போட்டி - ஊழியர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பேங்க் ஆப் இந்தியா சார்பில் ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான மாரத்தான் போட்டியை கோவை மண்டல மேலாளர் அன்புமணி துவக்கி வைத்த நிலையில் ஊழியர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.


கோவை: ரேஸ்கோர்ஸ்மைதானத்தில் பேங்க் ஆப் இந்தியா சார்பில், வங்கி ஊழியர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

பேங்க் ஆப் இந்தியா வங்கி வருடம்தோறும் அவர்களது ஊழியர்களுக்கும் குடும்பத்தினருக்கும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பேங்க் ஆப் இந்தியா வங்கி அவர்களது ஊழியர்களுக்கும், குடும்பத்தினருக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.



அதன்படி இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மூன்று கிலோ மீட்டர் பிரிவுக்கான மாரத்தான் போட்டியை நடத்தியது. இதில் வங்கியின் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியை கோவை மண்டல மேலாளர் அன்புமணி துவக்கி வைத்தார்.

குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை மண்டல உதவி பொது மேலாளர்கள் முனுசாமி ராஜி, பிரதீப் ரஞ்சன்பால், மோகன் மரேதி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

மேலும் வருகின்ற 11ஆம் தேதி பாரதியார் பல்கலையில் கிரிக்கெட், சதுரங்கம், இசை நாற்காலி, கேரம்போர்டு, உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கொரொனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பேங்க் ஆப் இந்தியாஇந்த போட்டிகளை நடத்தாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...