கோவையில் பேங்க் ஆப் இந்தியா சார்பில் மாரத்தான் போட்டி - ஊழியர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பேங்க் ஆப் இந்தியா சார்பில் ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான மாரத்தான் போட்டியை கோவை மண்டல மேலாளர் அன்புமணி துவக்கி வைத்த நிலையில் ஊழியர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.


கோவை: ரேஸ்கோர்ஸ்மைதானத்தில் பேங்க் ஆப் இந்தியா சார்பில், வங்கி ஊழியர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

பேங்க் ஆப் இந்தியா வங்கி வருடம்தோறும் அவர்களது ஊழியர்களுக்கும் குடும்பத்தினருக்கும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பேங்க் ஆப் இந்தியா வங்கி அவர்களது ஊழியர்களுக்கும், குடும்பத்தினருக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.



அதன்படி இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மூன்று கிலோ மீட்டர் பிரிவுக்கான மாரத்தான் போட்டியை நடத்தியது. இதில் வங்கியின் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியை கோவை மண்டல மேலாளர் அன்புமணி துவக்கி வைத்தார்.

குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை மண்டல உதவி பொது மேலாளர்கள் முனுசாமி ராஜி, பிரதீப் ரஞ்சன்பால், மோகன் மரேதி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

மேலும் வருகின்ற 11ஆம் தேதி பாரதியார் பல்கலையில் கிரிக்கெட், சதுரங்கம், இசை நாற்காலி, கேரம்போர்டு, உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கொரொனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பேங்க் ஆப் இந்தியாஇந்த போட்டிகளை நடத்தாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...