தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் என வதந்தி பரப்பியவர் மீது கோவையில் வழக்குப்பதிவு!

கர்நாடகாவில் நடந்த வடமாநில இளைஞர் கொலை சம்பவம் குறித்த வீடியோவை தமிழகத்தில் வடமாநில இளைஞர்கள் மீது தாக்குதல் என டுவிட்டரில் வதந்தி பரப்பிய பீகார் மாநிலத்தவர் மீது கோவையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் என தவறான வீடியோவை டுவிட்டரில் பதிவிட்ட பீகார் மாநிலத்தவர் மீது கோவையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் கொடூரமாக தாக்கப்படுவதாக தவறான வீடியோவை டுவிட்டரில் பதிவிட்ட நிலையில் இச்சம்பவம் வடமாநிலத்தவர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பதிவில், பீகார் வாலிபர்கள் தமிழர்களால் கொடூரமாக நடுரோட்டில் வெட்டி கொல்லப்படுவதாக தெரிவித்து கொலை வீடியோக்களை பதிவிட்டுள்ளனர். இது குறித்து வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலிசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சைபர் கிரைம் போலீசார் வடமாநில இளைஞர்கள் குறித்த டுவிட்டர் பதிவுக்கு பிறகு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் yuvarajsinghrajput@yuvarajS90011068 என்ற இணைய முகவரியில் வன்முறையை தூண்டும் விதமான மோசமான பதிவை பதிவிட்டிருந்தார்.

அதாவது தமிழ்நாட்டில் இரக்கமின்றி பீகார் சகோதரகள் அடித்து கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால் இந்த நித்தீஸ் அரசாங்கம் அரசாங்கமானது அமைதி காக்கின்றனர். இந்த அரசாங்கம் துன்புறுத்தலில் மட்டுமெ அக்கறை கொண்டுள்ளது என இந்தி மொழியில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவோடு கோடாரியால் சில வாலிபர்கள் ஒரு வாலிபரை கொடூரமாக் வெட்டி கொல்லும் வீடியோவை பதிவிட்டிருக்கின்றார். பெரும் பதற்றமான இந்த வீடியோவில் உள்ள கோடாரி கொலை கர்நாடக மாநிலத்திலே நடந்தது.

பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் நடந்ததாக தவறாக பதிவிட்டிருக்கின்ற இந்த பதிவானது இருவேறு தரப்பினரிடையே வெறுப்பினை வளர்த்து ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக இருப்பதாக எண்ணி சைபர் கிரைம் போலீசார் 153 ஏ (பி), 505 (2), 66 (எஃப்) ஐ டி சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து குற்றவாளியை பிடிக்க திட்டமிட்டிருக்கின்றனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சிட்டி சைபர் கிரைம் போலிஸார் அடங்கிய தனிப்படை, வட மாநிலத்துக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...