தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் என வதந்தி பரப்பியவர் மீது கோவையில் வழக்குப்பதிவு!

கர்நாடகாவில் நடந்த வடமாநில இளைஞர் கொலை சம்பவம் குறித்த வீடியோவை தமிழகத்தில் வடமாநில இளைஞர்கள் மீது தாக்குதல் என டுவிட்டரில் வதந்தி பரப்பிய பீகார் மாநிலத்தவர் மீது கோவையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் என தவறான வீடியோவை டுவிட்டரில் பதிவிட்ட பீகார் மாநிலத்தவர் மீது கோவையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் கொடூரமாக தாக்கப்படுவதாக தவறான வீடியோவை டுவிட்டரில் பதிவிட்ட நிலையில் இச்சம்பவம் வடமாநிலத்தவர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பதிவில், பீகார் வாலிபர்கள் தமிழர்களால் கொடூரமாக நடுரோட்டில் வெட்டி கொல்லப்படுவதாக தெரிவித்து கொலை வீடியோக்களை பதிவிட்டுள்ளனர். இது குறித்து வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலிசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சைபர் கிரைம் போலீசார் வடமாநில இளைஞர்கள் குறித்த டுவிட்டர் பதிவுக்கு பிறகு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் yuvarajsinghrajput@yuvarajS90011068 என்ற இணைய முகவரியில் வன்முறையை தூண்டும் விதமான மோசமான பதிவை பதிவிட்டிருந்தார்.

அதாவது தமிழ்நாட்டில் இரக்கமின்றி பீகார் சகோதரகள் அடித்து கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால் இந்த நித்தீஸ் அரசாங்கம் அரசாங்கமானது அமைதி காக்கின்றனர். இந்த அரசாங்கம் துன்புறுத்தலில் மட்டுமெ அக்கறை கொண்டுள்ளது என இந்தி மொழியில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவோடு கோடாரியால் சில வாலிபர்கள் ஒரு வாலிபரை கொடூரமாக் வெட்டி கொல்லும் வீடியோவை பதிவிட்டிருக்கின்றார். பெரும் பதற்றமான இந்த வீடியோவில் உள்ள கோடாரி கொலை கர்நாடக மாநிலத்திலே நடந்தது.

பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் நடந்ததாக தவறாக பதிவிட்டிருக்கின்ற இந்த பதிவானது இருவேறு தரப்பினரிடையே வெறுப்பினை வளர்த்து ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக இருப்பதாக எண்ணி சைபர் கிரைம் போலீசார் 153 ஏ (பி), 505 (2), 66 (எஃப்) ஐ டி சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து குற்றவாளியை பிடிக்க திட்டமிட்டிருக்கின்றனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சிட்டி சைபர் கிரைம் போலிஸார் அடங்கிய தனிப்படை, வட மாநிலத்துக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...