ஆதரவற்றோர்களுடன் மகிழ்ச்சி உரையாடலில் ஈடுபட்ட கோவை சுகுணா ரிப் வி பள்ளி மாணவர்கள்

கோவை சுகுணா ரிப் வி பள்ளி மாணவர்களால் "உதவும் உள்ளங்கள்" என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் மாணவர்கள் சில தொகைகளை திரட்டியுள்ளனர். 



அந்த தொகையினைக் கொண்டு இன்று கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பிலன் கீழ் செயல்பட்டு வரும் மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ள ஆதரவற்றவர்களுடன் உணவு மற்றும் கலை நிகழ்ச்சி என அவர்களுடன் ஒருநாள் இருந்து  கலந்துரையாடி முதியவர்களுக்கு ஆதரவு கூறி மாணவர்கள் மகிழ்வித்தனர்.



இதுகுறித்து சுகுணா ரிப் வி பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், இது போன்ற பள்ளி மாணவர்கள் ஆதரவற்ற காப்பகத்திற்கு வருவதனால் அவர்களது வாழ்வில் பல அனுபவங்களை கற்றுக்கொள்ள முடிகிறது.

முதியவர்கள் மாணவர்கள் கலந்துரையாடுவதன் மூலம் மாணவர்கள் தங்களது தாய், தந்தை, முதியவர் என யாவரையும் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு சிறுவயதிலேயே ஏற்படுத்த முடியும்" என தெரிவித்தார்.



இதைத்தொடர்ந்து, காப்பகத்தில் இருந்து விடைபெறும்போது மாணவர்கள் அனைவரும் தங்களது தாய், தந்தையரை கடைசிவரை காப்பாற்றுவோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டது அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.



Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...