திருப்பூரில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு காவல் ஆணையர் நேரில் விழிப்புணர்வு

திருப்பூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்பதை தெரிவிக்கும் வகையில், மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வீடியோக்களைக் கொண்டு திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் நடந்ததாகப் பீகாரைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் அச்சமடைந்து, தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.



இதனிடைய திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை என்பதை தொழிலாளர்களுக்கு விளக்கும் வகையில், திருப்பூர் மாநகரில் உள்ள பல்வேறு பின்னலாடை நிறுவனங்களுக்கு மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு தலைமையில் காவல்துறையினர் நேரில் சென்று வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள் திருப்பூரில் நடைபெற்றது இல்லை எனவும், இருப்பினும் திருப்பூரில் உள்ள வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல்வேறு மொழிகளில் பேசக்கூடிய தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஏதேனும் அச்சம் இருப்பின் காவல்துறையின் கட்டுப்பாடு அறையை தொடர்பு கொண்டு தங்கள் அச்சத்தைப் போக்கிக் கொள்ளலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



பின்னர் செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு கூறுகையில், சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோக்கள் எதுவும் திருப்பூரில் நடைபெற்றது அல்ல, சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள் போல உண்மையான கள நிலவரம் இல்லை, இங்கு அனைத்து தரப்பு தொழிலாளர்களும் அமைதியாக இருந்து வருகின்றனர். தொடர்ந்து சைபர் கிரைம் காவல்துறை சார்பில் வதந்தி பரப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...