திருப்பூரில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு காவல் ஆணையர் நேரில் விழிப்புணர்வு

திருப்பூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்பதை தெரிவிக்கும் வகையில், மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வீடியோக்களைக் கொண்டு திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் நடந்ததாகப் பீகாரைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் அச்சமடைந்து, தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.



இதனிடைய திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை என்பதை தொழிலாளர்களுக்கு விளக்கும் வகையில், திருப்பூர் மாநகரில் உள்ள பல்வேறு பின்னலாடை நிறுவனங்களுக்கு மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு தலைமையில் காவல்துறையினர் நேரில் சென்று வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள் திருப்பூரில் நடைபெற்றது இல்லை எனவும், இருப்பினும் திருப்பூரில் உள்ள வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல்வேறு மொழிகளில் பேசக்கூடிய தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஏதேனும் அச்சம் இருப்பின் காவல்துறையின் கட்டுப்பாடு அறையை தொடர்பு கொண்டு தங்கள் அச்சத்தைப் போக்கிக் கொள்ளலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



பின்னர் செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு கூறுகையில், சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோக்கள் எதுவும் திருப்பூரில் நடைபெற்றது அல்ல, சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள் போல உண்மையான கள நிலவரம் இல்லை, இங்கு அனைத்து தரப்பு தொழிலாளர்களும் அமைதியாக இருந்து வருகின்றனர். தொடர்ந்து சைபர் கிரைம் காவல்துறை சார்பில் வதந்தி பரப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...