கோவையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற கட்டிட தொழிலாளி கைது

கோவை வரதராஜபுரத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற புலியகுளம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்தன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துத் திருட முயன்றவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

கோவை சிங்காநல்லூர் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் கம்பியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

விரைந்து வந்த போலீசார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்த நபரை பிடித்தனர். விசாரணையில் அவர் புலியகுளம் பகுதியைச் சேர்ந்த மாரிசாமி என்பவரது மகன் ஆனந்தன் (39) என்பது தெரியவந்தது.

மேலும் கட்டிட வேலை செய்து வந்த ஆனந்தன் பணத் தேவைக்காக ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...