கோவையில் பிரபல கஞ்சா வியாபாரி கைது - போலீசார் அதிரடி

கோவை கெம்பட்டி காலனி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கார்த்திக் என்ற இளைஞரை கைது செய்த பெரியகடைவீதி போலீசார், அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சா, செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கெம்பட்டி காலனி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கார்த்திக் எனும் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்க மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், தனிப்படை போலீசார் அவ்வப்போது ரோந்து சென்று கஞ்சா, போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் உள்ளிட்டவற்றை விற்கும் கும்பல் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை பெரியகடைவீதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரு சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோவை கெம்பட்டி காலனி அருகே உள்ள கீரை தோட்டம் பகுதியில் போலீசார் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பது தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் பெயர் கார்த்திக் என்பதும், அவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை, அடிதடி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.



இந்நிலையில் அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பொட்டலம், ஒரு செல்போனையும் பறிமுதல் செய்த போலீசார், கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...