கோவையில் பொறியாளரிடம் கத்தியை காட்டி வழிப்பறி! - போலீசார் விசாரணை

கோவையைச் சேர்ந்த பொறியாளர் வீரமணி(31) பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் இரவு வீட்டிற்குச் சென்ற போது, நெசவர் காலனி அருகே வழிமறித்த மர்ம கும்பல் கத்தியைக் காட்டி, தங்க செயின், செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துச் சென்றது. புகாரின் பேரில் போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை நெசவர் காலனி அருகே இரவில் தனியாகச் சென்ற பொறியாளரிடம் மர்ம கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி (31). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனது பணியை முடித்துவிட்டு நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.

நெசவர் காலனியில் உள்ள டாஸ்மாக் அருகே சென்றபோது, அவரை வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி, வீரமணி அணிந்திருந்த தங்கச் சங்கிலி, செல்போன் மற்றும் ரூ.1500 ரொக்கம் உள்ளிட்டவற்றைப் பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் வீரமணி அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேர் கொண்ட கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...