கோவை வேளாண் பல்கலை எதிரே லாரி விபத்து - போலீசார் விசாரணை

கோவையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான லாரி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அருகே அதிகாலை சுமார் 4.30 மணிக்குச் சென்ற போது, எதிர்பாராத விதமாக டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


கோவை: வடவள்ளி- மருதமலை சாலையில் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

கோவையில் உள்ள சில கட்டுமான பணிகளில் ஈடுபட்டுவரும் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கனரக வாகனம் ஒன்று வடவள்ளி - மருத மலை சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அருகே லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது லாரி அதிகாலை 4.30 மணிக்கு எதிர்பாராத விதமாக டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான லாரியை மீட்கும் பணி நடந்து வருகின்றது. அதிகாலை விபத்து நடந்ததனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் உறக்கத்தில் வண்டியை ஓட்டியதால் விபத்து நடந்ததா? வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததா? அல்லது வேறு என்ன காரணம் என வடவள்ளி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய சாலையில் விபத்து நடந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. லாரியை மீட்ட பின்னர் போக்குவரத்து வழக்கம் போல இயல்புநிலைக்குத் திரும்பியது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...