மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் கட்டிட தொழிலாளி பலி

கோவை மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். கட்டிடத் தொழிலாளியான இவர், வேலைக்காக இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் அருகே சென்ற போது எதிரே சரக்கு வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.


கோவை: மேட்டுபாளையம் அருகே கட்டிடத் தொழிலாளி சென்ற இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (35). கட்டிடத் தொழிலாளி. இவருக்குத் திருமணமாகி இரு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நாகராஜ் தனக்கு சொந்தமான பைக்கில் சிறுமுகையிலிருந்து வேலைக்காக மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அய்யப்பன் கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இதில் நாகராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அதே இடத்தில் உயிரிழந்தார்.

தகவலறிந்த சிறுமுகை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...