கோவை வேளாண் பல்கலையில் தேசிய அறிவியல் தின விழா

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய அறிவியல் தினவிழாவில், நடத்தப்பட்ட கருத்தரங்கு மற்றும் போட்டிகளில் கோவை சுற்றுவட்டாரத்தில் உள்ள 27 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அறிவியல் தின விழாவில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதியன்று தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்.சி.வி.ராமனை பெருமைப்படுத்தும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.



சர்.சி.வி.ராமன் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாட்டை உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28. இந்த ஆண்டு “உலகளாவிய நல்வாழ்வுக்கான, உலகளாவிய அறிவியல்” என்னும் கருப்பொருளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உயிரித் தொழில்நுட்பவியல் மாணவர்களால் தேசிய அறிவியல் தினம் நடத்தப்பட்டது.



இந்த நிகழ்வில், சிறப்புரையாற்றிய பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கீதாலட்சுமி பேசியதாவது, 1,960களில் தானியங்களை இறக்குமதி செய்து கொண்டிருந்த இந்தியா, இன்று ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு அறிவியல் ஆராய்ச்சி பெரும் பங்கு வகிக்கிறது.

இந்த வருடம் 23 அதிக விளைச்சல் தரும் வகைகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. மேலும் கொரோனா பெருந்தொற்றின் போதும். உக்ரைன் போரின் போதும் இந்தியா தானியங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்தது. அனைத்து யோசனைகளும் வணிக பயன்பாட்டிற்கு காப்புரிமை பெற வேண்டும், என்றார்.



அமெரிக்காவின் மிசோரி பல்கலைக்கழகத்தின் தாவர அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பேராசிரியரான ஹரி கிருஷ்ணன் பேசுகையில், மாணவர்கள் அறிவியல் மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அறிவியலில் வெற்றிக்கான திறவுகோல் ஏன் என்ற கேள்வி தான். அதனை மாணவர்கள் அனைத்திற்கும் கேட்க வேண்டும். தோல்வியை ஏற்பதும், கடின உழைப்பும் அறிவியலில் வெற்றி பெற தேவையானவை, என்றார்.



மாணவர் அமைப்புச் செயலாளர்கள் பிரகல்யா வரவேற்றார். அரவிந்த் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 27 பள்ளிகளை சேர்ந்த 247 மாணவர்கள் கருத்தரங்கு மற்றும் போட்டிகளில் பங்கேற்றனர். இறுதியாக போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...