தொண்டாமுத்தூர் அரசுக் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் தொடக்கம்

தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கப்பட்டது. இதில் கல்லூரியினுடைய முன்னாள் முதல்வர் பேராசிரியர் அன்பழகன் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.



கோவை: தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கப்பட்டது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முனைவர் பாபு மேலாண்மைத் துறை தலைவர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய கல்லூரியினுடைய முதல்வர் முனைவர் தேவராஜ் அருமை நாயகம், இளம் வயதிலேயே பிறருக்கு உதவும் எண்ணத்தை வளர்த்து தன்னை போல் பிறரை நேசிக்க வேண்டும் என்று தலைமை உரை நிகழ்த்தினார்.



அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினரான முனைவர். அகிலா இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் பாரதியார் பல்கலைக்கழகம் அவர்கள் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தை தொடக்கி வைத்து கல்வியின் மூலம் மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்து நாட்டை வல்லரசாக முயன்றிட வேண்டும் என்று அப்துல்கலாமின் பொன்மொழிகளின் வழி சிறப்புரை வழங்கினார்.



இதனைத் தொடர்ந்து கல்லூரியினுடைய முன்னாள் முதல்வர் பேராசிரியர் அன்பழகன் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அவர் தனது சிறப்புரையில் மாணவர்கள் அறிவோடு அன்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அன்பின் வழியது உயிர்நிலை என்ற கருத்தை முன் வைத்தார். அரசு கலைக் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் திட்ட அலுவலர் முனைவர் சிவச்சந்திரன் நன்றியுரை நிகழ்த்தினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...