கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை - 2 பேருக்கு வழங்கிய கோவை ஆட்சியர்!

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பணியின்போது காலமான இருவரது குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த நவமணி சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது மகன் நரேந்திர குமாருக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணையினை வழங்கினார்.



இதேபோன்று, கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ரவிக்குமார் உயிரிழந்த நிலையில் அவரது மகள் தனுஸ்ரீக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) அலர்மேல் மங்கை மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கமலக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...