தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் தாக்கப்படுவதாக பரவும் வீடியோக்கள் - காவல்துறை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் தாக்கப்படுகிறார்கள், இந்தி பேசும் மக்கள் தாக்கப்படுகிறார்கள், இந்தி பேசும் மக்கள் மீது இத்தனை அடக்குமுறை இந்தியாவில் இதற்கு முன்பு பார்த்ததில்லை என்ற ஆடியோவுடன் வட இந்தியாவில் வீடியோக்கள் வேகமாகப் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: தமிழ்நாட்டிற்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, வட இந்தியாவில் சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வேகமாகப் பகிரப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வரும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது.இந்நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆளும் தமிழ்நாட்டில் வட மாநில மற்றும் இந்தி பேசும் மக்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடைபெறுவதாக முகமத் தன்வீர் என்பவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சில வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.



இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் முதல் வீடியோவில் கோவையில் ஒட ஒட விரட்டி ரவுடி ஒருவர் வெட்டியும் துப்பாக்கியால் கொலை செய்யப்படுகிறார். இதில் வடமாநிலத்தவருக்குத் தொடர்பில்லை. இந்த வீடியோ சமீபத்தில் தமிழகம் முழுவதும் வைரலானது. இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.



இரண்டாவது வீடியோவில், கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி கொலை வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த கோகுல் என்பவரை முன்விரோதம் காரணமாக ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவர்களும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

மூன்றாவது வீடியோ வடமாநிலத்தில் நிகழ்ந்த சம்பவம் எனத் தெரியவந்துள்ளது. கடந்த பிப்.19ஆம் தேதி தனியார் செய்தி நிறுவனத்தில் இந்த செய்தி வீடியோவுடன் பதிவாகியுள்ளது.

இந்த டிவிட்டர் பதிவைக் குறிப்பிட்டு முகமது தன்வீரை எச்சரித்த தமிழ்நாடு காவல்துறை, இதுபோன்ற வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...