தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் தாக்கப்படுவதாக பரவும் வீடியோக்கள் - காவல்துறை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் தாக்கப்படுகிறார்கள், இந்தி பேசும் மக்கள் தாக்கப்படுகிறார்கள், இந்தி பேசும் மக்கள் மீது இத்தனை அடக்குமுறை இந்தியாவில் இதற்கு முன்பு பார்த்ததில்லை என்ற ஆடியோவுடன் வட இந்தியாவில் வீடியோக்கள் வேகமாகப் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: தமிழ்நாட்டிற்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, வட இந்தியாவில் சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வேகமாகப் பகிரப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வரும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது.இந்நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆளும் தமிழ்நாட்டில் வட மாநில மற்றும் இந்தி பேசும் மக்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடைபெறுவதாக முகமத் தன்வீர் என்பவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சில வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.



இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் முதல் வீடியோவில் கோவையில் ஒட ஒட விரட்டி ரவுடி ஒருவர் வெட்டியும் துப்பாக்கியால் கொலை செய்யப்படுகிறார். இதில் வடமாநிலத்தவருக்குத் தொடர்பில்லை. இந்த வீடியோ சமீபத்தில் தமிழகம் முழுவதும் வைரலானது. இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.



இரண்டாவது வீடியோவில், கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி கொலை வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த கோகுல் என்பவரை முன்விரோதம் காரணமாக ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவர்களும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

மூன்றாவது வீடியோ வடமாநிலத்தில் நிகழ்ந்த சம்பவம் எனத் தெரியவந்துள்ளது. கடந்த பிப்.19ஆம் தேதி தனியார் செய்தி நிறுவனத்தில் இந்த செய்தி வீடியோவுடன் பதிவாகியுள்ளது.

இந்த டிவிட்டர் பதிவைக் குறிப்பிட்டு முகமது தன்வீரை எச்சரித்த தமிழ்நாடு காவல்துறை, இதுபோன்ற வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...