கோவையில் பெண் காவல் ஆய்வாளருக்கு பரிவட்ட மரியாதை - கோனியம்மன் கோயில் நிர்வாகம் கவுரவிப்பு!

கோவையில் சமீபத்தில் முடிந்த கோனியம்மன் கோயில் திருவிழாவில் திருட்டு சம்பவம் நடைபெறாமல் சிறப்பாக கண்காணிப்பு பணி மேற்கொண்ட பெண் காவல் ஆய்வாளர் லதாவிற்கு பரிவட்டம் கட்டி, கோயில் நிர்வாகத்தினர் மரியாதை செலுத்தினர்.


கோவை: கோவை மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் மாசி தேரோட்டம் நேற்று முன்தினம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர் திருவிழாவிற்கு பெரிய கடை வீதி போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில் பெரிய கடை வீதி காவல் ஆய்வாளருக்கு பரிவட்டம் கட்டுவது வழக்கம். அதன்படி கோவில் நிர்வாகத்தார் பெரிய கடை வீதி காவல் நிலையத்திற்கு சென்று அங்கு இருந்த பெண் ஆய்வாளர் லதாவிற்கு பரிவட்டம் கட்டி, தேரை வடம் பிடித்து இழுக்க அழைப்பு விடுத்தார். பெண் போலீஸ் ஆய்வாளர்களுக்கு பரிவட்டம் கட்டுவது இதுவே முதல் முறையாகும்.



இதற்கு முன்பு, தேரோட்டத்திற்கு அங்கு பணியாற்றிய ஆண் ஆய்வாளர்கள் பரிவட்டம் கட்டப்பட்டு தேரை வடம் பிடிப்பர். இந்த முறை பெண் ஆய்வாளர் வடம் பிடித்து இழுத்துள்ளார். அவருடன் மாநகர துணை ஆணையர் சந்தீஷ் உள்ளிட்ட போலீசாரும் பரிவட்டம் கட்டியவாறு தேரோட்டத்தை நடத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவின்போது சின்ன சின்ன திருட்டு சம்பவங்கள் நடைபெறும். அதனை தடுக்கும் வகையில், இந்த ஆண்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் சாதாரண உடைகளில் மக்களுடன் மக்களாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதால் இந்த முறை ஒரு திருட்டு சம்பவம் கூட நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...