கோவையில் பெண் காவல் ஆய்வாளருக்கு பரிவட்ட மரியாதை - கோனியம்மன் கோயில் நிர்வாகம் கவுரவிப்பு!

கோவையில் சமீபத்தில் முடிந்த கோனியம்மன் கோயில் திருவிழாவில் திருட்டு சம்பவம் நடைபெறாமல் சிறப்பாக கண்காணிப்பு பணி மேற்கொண்ட பெண் காவல் ஆய்வாளர் லதாவிற்கு பரிவட்டம் கட்டி, கோயில் நிர்வாகத்தினர் மரியாதை செலுத்தினர்.


கோவை: கோவை மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் மாசி தேரோட்டம் நேற்று முன்தினம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர் திருவிழாவிற்கு பெரிய கடை வீதி போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில் பெரிய கடை வீதி காவல் ஆய்வாளருக்கு பரிவட்டம் கட்டுவது வழக்கம். அதன்படி கோவில் நிர்வாகத்தார் பெரிய கடை வீதி காவல் நிலையத்திற்கு சென்று அங்கு இருந்த பெண் ஆய்வாளர் லதாவிற்கு பரிவட்டம் கட்டி, தேரை வடம் பிடித்து இழுக்க அழைப்பு விடுத்தார். பெண் போலீஸ் ஆய்வாளர்களுக்கு பரிவட்டம் கட்டுவது இதுவே முதல் முறையாகும்.



இதற்கு முன்பு, தேரோட்டத்திற்கு அங்கு பணியாற்றிய ஆண் ஆய்வாளர்கள் பரிவட்டம் கட்டப்பட்டு தேரை வடம் பிடிப்பர். இந்த முறை பெண் ஆய்வாளர் வடம் பிடித்து இழுத்துள்ளார். அவருடன் மாநகர துணை ஆணையர் சந்தீஷ் உள்ளிட்ட போலீசாரும் பரிவட்டம் கட்டியவாறு தேரோட்டத்தை நடத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவின்போது சின்ன சின்ன திருட்டு சம்பவங்கள் நடைபெறும். அதனை தடுக்கும் வகையில், இந்த ஆண்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் சாதாரண உடைகளில் மக்களுடன் மக்களாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதால் இந்த முறை ஒரு திருட்டு சம்பவம் கூட நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...