கோவையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை - பெரிய நகைகளை விட்டு சிறிய நகைகளை மட்டுமே திருட்டு!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சண்முகசுந்தரம் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 13 சவரன் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு பகுதியில் வசித்துவருபவர்சண்முகசுந்தரம் (வயது64). ஓய்வு பெற்ற TNEB ஊழியரான இவர், தனது மனைவியின் நகைகளை பீரோவில் பூட்டி வைத்துவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். வீடு திரும்பிவந்து பார்த்தபொழுது, பீரோவில் இருந்த நகைகளில் ஒரு சில நகைகள் காணாமல் போயிருந்தன.

ஆரம் போன்ற பெரிய நகைகள் பத்திரமாக இருந்த நிலையில், 7 சவரன் தங்க சங்கிலி, 4 சவரன் வளையல், 1 சவரன் மோதிரம், முக்கால் சவரன் தோடு என சுமார் 13சவரன் நகைகள் மாயமாகியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரில்வழக்கு பதிவு செய்த போலீசார், முதியவரின் வீட்டிற்கு நேரில் சென்று, அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் உள்ள நகைகளில் பெரிய நகைகளை விட்டுவிட்டு சிறிய நகைகளை மட்டுமே கொள்ளையடித்தவர்கள் யார்? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்படி வித்தியாசமாக திருடியிருப்பது ஏன் என்ற குழப்பத்துடன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...