கோவையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை - பெரிய நகைகளை விட்டு சிறிய நகைகளை மட்டுமே திருட்டு!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சண்முகசுந்தரம் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 13 சவரன் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு பகுதியில் வசித்துவருபவர்சண்முகசுந்தரம் (வயது64). ஓய்வு பெற்ற TNEB ஊழியரான இவர், தனது மனைவியின் நகைகளை பீரோவில் பூட்டி வைத்துவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். வீடு திரும்பிவந்து பார்த்தபொழுது, பீரோவில் இருந்த நகைகளில் ஒரு சில நகைகள் காணாமல் போயிருந்தன.

ஆரம் போன்ற பெரிய நகைகள் பத்திரமாக இருந்த நிலையில், 7 சவரன் தங்க சங்கிலி, 4 சவரன் வளையல், 1 சவரன் மோதிரம், முக்கால் சவரன் தோடு என சுமார் 13சவரன் நகைகள் மாயமாகியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரில்வழக்கு பதிவு செய்த போலீசார், முதியவரின் வீட்டிற்கு நேரில் சென்று, அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் உள்ள நகைகளில் பெரிய நகைகளை விட்டுவிட்டு சிறிய நகைகளை மட்டுமே கொள்ளையடித்தவர்கள் யார்? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்படி வித்தியாசமாக திருடியிருப்பது ஏன் என்ற குழப்பத்துடன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...