ஈரோடு தேர்தலில் வெற்றி - கோவை துடியலூரில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக கொண்டாட்டம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, கோவை சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பச்சைமுத்து தலைமையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


கோவை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றியை கோவையில் கூட்டணி கட்சியினர் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதனை கொண்டாடும் விதமாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை அடுத்த சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பச்சமுத்து தலைமையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.



முன்னதாக கோவை மாநகராட்சி 15வது வார்டு மாமன்ற உறுப்பினராக பதவி ஏற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி கவுன்சிலர் சாந்தாமணி பச்சைமுத்துவிற்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல் காதர், சர்க்கிள் தலைவர் சின்ன ராமகிருஷ்ணன், மணி, 14வது வார்டு தலைவர் ரங்கசாமி, 15 ஆவது வார்டு செயலாளர் ரகுபதி சுபாஷ், கவுண்டம்பாளையம் திமுக பிரமுகர் ஜவகர், கே.ஜி.புதூர் கண்ணன், பழனிச்சாமி என்கிற மணி, கவுண்டம்பாளையம் ரவி, காங்கிரஸ் கட்சி சேர்ந்த ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...