ஈரோடு இடைத்தேர்தல் வெற்றிக்கு ஸ்டாலின்தான் காரணம்..! - ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றிக்காக திமுக அமைச்சர்களின் உழைப்பு என்பது சாதாரண உழைப்பு கிடையாது. அவர்கள் தேர்தலை சந்தித்தபோதுகூட இந்த அளவுக்கு உழைத்திருப்பார்களா? என்ற சந்தேகம் இருக்கிறது என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


கோவை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. தபால் ஓட்டு முதல் அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னணி வகித்துவருகிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இளங்கோவன் பேசியதாவது:

தேர்தல் காலத்தில் கொடுத்த 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் மக்கள் இந்த வெற்றியை தந்துள்ளார்கள். ஈரோட்டில் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. மறைந்த எனது மகன் திருமகன் ஈவேரா விட்டுச்சென்ற பணிகளை தொடர்வேன். இங்கு அமைச்சர் முத்துசாமியோடு சேர்ந்து தமிழக முதல்வரை சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன்.

ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கு பெருமையாக இருக்கிறது. ஸ்டாலின் என்னைவிட வயதில் சிறியாதவராக இருந்தாலும் அனுபவத்தில் பல மடங்கு மூத்தவர். அவர் மூலம் இந்த ஊர் மக்களுக்கு பல நல்ல காரியங்கள் செய்வேன். வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

திமுக அமைச்சர்களின் உழைப்பு என்பது சாதாரண உழைப்பு கிடையாது. அவர்கள் தேர்தலை சந்தித்தபோதுகூட இந்த அளவுக்கு உழைத்திருப்பார்களா? என்ற சந்தேகம் இருக்கிறது. தேர்தல் பணியாற்றிய அமைச்சர் பெருமக்களுக்கு நன்றி. கமலஹாசன், கனிமொழி போன்ற தலைவர்களின் பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் திரண்டனர்.

கடுமையான வேலையும் பொருட்படுத்தாமல் முதல்வர் மு.க. ஸ்டாலின் இங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த இடைத்தேர்தல் வெற்றி, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். எனக்கு வாக்களித்த ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...