தாராபுரம் மூலனூர் வஞ்சியம்மன் கோயில் தேரோட்டம் - வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம்!

திருப்பூர் மாவட்டம் மூலனூரில் உள்ள வஞ்சியம்மன் கோயில் தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு, தேரின் வடம்பிடித்து இழுத்தனர். உப்பு, மிளகு மற்றும் நவதானியங்களை அம்மன் மீது தூவி பயபக்தியுடன் வழிபட்டனர்.


திருப்பூர்: இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மூலனூர் வஞ்சியம்மன் கோவில் கொங்கு, சேரலான்,பூசன் குலத்தவருக்கு சொந்தமானது. இந்த கோவிலில் 41- ஆம் ஆண்டு தேர் திருவிழா மற்றும் இலட்சார்ச்சனை பெருவிழா நேற்று கலச பூஜை, வேள்வி அபிஷேகம், தீபாராதனைகளுடன் தொடங்கியது.

நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு மேல் தேர் முன் கோவிலை சேர்ந்த கொங்கு, சேரலான், பூசன் குலத்தவர்கள் மற்றும் உத்திர நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் சார்பில் தேங்காய் உடைக்கப்பட்டது.



பின்னர், ராமநாதன், ராமசாமி உள்ளிட்ட கோயிலைச் சேர்ந்த குலத்தவர்கள் மற்றும் தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் மூலனூர் கிழக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி துரை தமிழரசு ஒன்றிய குழு பெருந்தலைவர் சுமதி கார்த்தி பேரூர் கழக செயலாளர் தண்டபாணி, அதிமுக பேரூர் கழக செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் வடம் பிடித்து தேர்த்திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

தேரோட்டத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உப்பு,மிளகு மற்றும் நவதானியங்களை அம்மன் மீது தூவி பயபக்தியுடன் வழிபட்டனர். தேர் திருவிழாவை முன்னிட்டு கோவிலில் நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தேர் திருவிழா ஏற்பாடுகளை மூலனூர் வஞ்சியம்மன் கோவில் கொங்கு, சேரலான், பூசன் நற்பணி மன்றம் மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...