கோவை அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம் தொடக்கம்!

கோவை துடியலூரை அடுத்த அப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துடியலூர் பகுதி திமுக செயலாளர் அருள்குமார் குழந்தைகளுக்கு உணவு வழங்கினார்.


கோவை: துடியலூர் அருகே மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்குக் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாளையொட்டி இத்திட்டம் பல்வேறு பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.



இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூரை அடுத்த அப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.



நிகழ்ச்சிக்கு 1ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கற்பகம் ராஜசேகரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துடியலூர் பகுதி செயலாளர் அருள்குமார் குழந்தைகளுக்கு உணவு வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராதாமணி, வட்ட கழக செயலாளர் ராஜசேகரன், பகுதி கழக பொருளாளர் ராக்கிமுத்து, வட்டக் கழக நிர்வாகிகள் வெங்கடேஷ், அன்பழகன், உதயகுமார், உதயகுமார், மணியன், ராஜ் கண்ணன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியை பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...