கோவை அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம் தொடக்கம்!

கோவை துடியலூரை அடுத்த அப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துடியலூர் பகுதி திமுக செயலாளர் அருள்குமார் குழந்தைகளுக்கு உணவு வழங்கினார்.


கோவை: துடியலூர் அருகே மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்குக் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாளையொட்டி இத்திட்டம் பல்வேறு பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.



இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூரை அடுத்த அப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.



நிகழ்ச்சிக்கு 1ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கற்பகம் ராஜசேகரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துடியலூர் பகுதி செயலாளர் அருள்குமார் குழந்தைகளுக்கு உணவு வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராதாமணி, வட்ட கழக செயலாளர் ராஜசேகரன், பகுதி கழக பொருளாளர் ராக்கிமுத்து, வட்டக் கழக நிர்வாகிகள் வெங்கடேஷ், அன்பழகன், உதயகுமார், உதயகுமார், மணியன், ராஜ் கண்ணன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியை பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...