கோவை அருகே குளத்தில் குளிக்க சென்ற பிளம்பர் நீரில் மூழ்கி பலி!

கோவை செல்வபுரம் அருகே செல்வ சிந்தாமணி குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பிளம்பிங் ஊழியர் கார்த்திகேயன், குளத்தின் நடுவே இருந்த பரிசலை எடுக்க முயன்ற போது சேற்றில் சிக்கியதால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அடுத்த செல்வபுரம் வடக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கார்த்திகேயன்(23). இவர் தனது நண்பர்களுடன் செல்வ சிந்தாமணி குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

குளித்துக் கொண்டிருந்த போது குளத்தின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த பரிசலை எடுப்பதற்காக கார்த்திகேயன் தனது நண்பர்களுடன் போட்டி போட்டு நீந்திச் சென்றார்.

இந்நிலையில் பரிசலை எடுத்துவிட்டு வரும்போது கார்த்திகேயன் சேற்றில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் சிறிது நேரத்தில் குளத்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...