கோவை அருகே குளத்தில் குளிக்க சென்ற பிளம்பர் நீரில் மூழ்கி பலி!

கோவை செல்வபுரம் அருகே செல்வ சிந்தாமணி குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பிளம்பிங் ஊழியர் கார்த்திகேயன், குளத்தின் நடுவே இருந்த பரிசலை எடுக்க முயன்ற போது சேற்றில் சிக்கியதால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அடுத்த செல்வபுரம் வடக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கார்த்திகேயன்(23). இவர் தனது நண்பர்களுடன் செல்வ சிந்தாமணி குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

குளித்துக் கொண்டிருந்த போது குளத்தின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த பரிசலை எடுப்பதற்காக கார்த்திகேயன் தனது நண்பர்களுடன் போட்டி போட்டு நீந்திச் சென்றார்.

இந்நிலையில் பரிசலை எடுத்துவிட்டு வரும்போது கார்த்திகேயன் சேற்றில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் சிறிது நேரத்தில் குளத்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...