கோவை துடியலூரில் திமுக சார்பில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்

தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாள் விழா, கோவை துடியலூர் 1ஆவது வட்ட திமுக சார்பில் துடியலூர் பேருந்து நிலையத்தில் கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.


கோவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி துடியலூரில் ஒன்றாவது வட்ட திமுகவினர், கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளை திமுகவினர் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக துடியலூர் 1ஆவது வட்ட திமுக சார்பில் துடியலூர் பேருந்து நிலையத்தில் வட்ட கழக செயலாளர் ராஜசேகரன் தலைமையில், கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் அருள்குமார் கலந்து கொண்டு கட்சிக் கொடியினை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

முன்னதாக 1ஆவது வார்டுக்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர் கற்பகம் ராஜசேகரன்,பகுதி கழக நிர்வாகிகள் ராக்கிமுத்து, சன்சோமு, சண்முகசுந்தரம், பிரபாகரன், சுப்பிரமணியன் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் காளிமுத்துசாமி, ஆனந்தன், உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...