வால்பாறை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

முதல்வர் மு.க ஸ்டாலின் 70-வது பிறந்தநாளையொட்டி வால்பாறை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் அணிவித்தார். நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன.


கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையில் முதல்வர் பிறந்த நாளை ஒட்டி இன்று பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதியில் முதல்வர் மு.க ஸ்டாலின் 70ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. முன்னதாக வால்பாறை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்கம் மோதிரத்தை நகராட்சி தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் வழங்கினார்.



மேலும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு பேனா, நோட்டு, புத்தகங்களையும் பரிசாக வழங்கினர்.



பின்னர் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் அமைந்து உள்ள நகராட்சி தாவரவியல் பூங்காவில் 70 மரக்கன்றுகளை நடவு செய்தனர். அதேபோல் வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்குச் சென்று தோட்டத் தொழிலாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் செல்வம், நகராட்சி கவுன்சிலர் அன்பரசன், ராஜேஸ்வரி பாலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...