கோவை மாநகராட்சி பட்ஜெட் குறித்து ஆலோசனை வழங்கலாம்..! - ஆணையர் பிரதாப் தகவல்

கோவை மாநகராட்சியில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்து தங்களது கருத்தை My City My Budget இணையதளம் மூலம் பொதுமக்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பதிவு செய்யலாம் என்று மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் குறித்து பொதுமக்கள் கருத்துக்கள் தெரிவிக்க இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சியில் 2023- 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட் முன்மொழிவு தொடர்பான பொதுமக்கள் தங்களது ஆலோசனைகள் அல்லது கருத்துகளை My City My Budget இணையதளம் (https://coimbatoresmartcity.org/mycity-mybudget)மூலம் பதிவு செய்யலாம்.

இந்த முயற்சியின் மூலம் நகரத்திற்கான பல்வேறு தேவைகள், கருத்துக்கள் மற்றும் பொதுக்கண்ணோட்டத்தில் பரிந்துரைகள் பற்றிய விரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் வழங்கும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடிய பின்னர் தேவையான நிதி மற்றும் திட்டங்களை ஒதுக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...