கோவை மாநகராட்சி பட்ஜெட் குறித்து ஆலோசனை வழங்கலாம்..! - ஆணையர் பிரதாப் தகவல்

கோவை மாநகராட்சியில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்து தங்களது கருத்தை My City My Budget இணையதளம் மூலம் பொதுமக்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பதிவு செய்யலாம் என்று மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் குறித்து பொதுமக்கள் கருத்துக்கள் தெரிவிக்க இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சியில் 2023- 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட் முன்மொழிவு தொடர்பான பொதுமக்கள் தங்களது ஆலோசனைகள் அல்லது கருத்துகளை My City My Budget இணையதளம் (https://coimbatoresmartcity.org/mycity-mybudget)மூலம் பதிவு செய்யலாம்.

இந்த முயற்சியின் மூலம் நகரத்திற்கான பல்வேறு தேவைகள், கருத்துக்கள் மற்றும் பொதுக்கண்ணோட்டத்தில் பரிந்துரைகள் பற்றிய விரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் வழங்கும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடிய பின்னர் தேவையான நிதி மற்றும் திட்டங்களை ஒதுக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...