கோவை மாநகராட்சி பட்ஜெட் குறித்து ஆலோசனை வழங்கலாம்..! - ஆணையர் பிரதாப் தகவல்

கோவை மாநகராட்சியில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்து தங்களது கருத்தை My City My Budget இணையதளம் மூலம் பொதுமக்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பதிவு செய்யலாம் என்று மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் குறித்து பொதுமக்கள் கருத்துக்கள் தெரிவிக்க இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சியில் 2023- 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட் முன்மொழிவு தொடர்பான பொதுமக்கள் தங்களது ஆலோசனைகள் அல்லது கருத்துகளை My City My Budget இணையதளம் (https://coimbatoresmartcity.org/mycity-mybudget)மூலம் பதிவு செய்யலாம்.

இந்த முயற்சியின் மூலம் நகரத்திற்கான பல்வேறு தேவைகள், கருத்துக்கள் மற்றும் பொதுக்கண்ணோட்டத்தில் பரிந்துரைகள் பற்றிய விரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் வழங்கும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடிய பின்னர் தேவையான நிதி மற்றும் திட்டங்களை ஒதுக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...