கோவை அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து கால்நடைகளை திருட முயன்ற கும்பல் - ஒருவர் கைது

கோவை மதுக்கரை அரிசிபாளையம் அருகே ராமலிங்கம் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, கோழிகளை திருட முயன்ற கார்த்திக் என்பவரை மதுக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய சரவணன், ரமேஷ் என இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை அரிசிபாளையம், மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்த ராமலிங்கம் (வயது55) அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை இரவு இவர் வழக்கம்போல பணிகளை முடித்து விட்டு தூங்கச் சென்றார்.

அப்போது, நள்ளிரவு மூன்று மணியளவில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது, தோட்டத்திற்குள் புகுந்த மூன்று மர்ம நபர்கள் அங்கிருந்த ஆடு மற்றும் கோழிகளை திருட முயன்றதாக தெரிகிறது.

இதையடுத்து ராமலிங்கம் சத்தம் போட்டதால் அங்கிருந்த சக விவசாயிகள், பொதுமக்கள் சுற்றி வலைத்து மூன்று பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால், ஒருவர் மட்டுமே சிக்கினார்.



இதையடுத்து அவரை மதுக்கரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர்கள் நெகமத்தை சேர்ந்த கார்த்திக் (வயது28), என்பதும் அவருடன் குனியமுத்தூரை சேர்ந்த சரவணன் (வயது27) மற்றும் அறிவொளிநகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது22) ஆகியார் வந்ததும் தெரியவந்தது.

மேலும், குடி போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த அவர்கள், ராமலிங்கம் வீட்டில் வைத்திருந்த ஆடுகளை திருட முயன்றதும் உறுதிப்படுத்தப்பட்டது. அத்தோடு, 3 பேர் மீதும் செல்வபுரம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட கார்த்திக்கை காவல்துறையினர் கைது செய்து, தப்பியோடி இருவரையும் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...