உடுமலையில் களைகட்டியது வடு மாங்காய் சீசன் - விற்பனை அமோகம்!

திருப்பூர் உடுமலையில் வடுமாங்காய் சீசன் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில் நாள் ஒன்று சுமார் ஒரு டன் அளவிலான மாங்காய் விற்பனைக்கு வருவதாகவும், வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வடு மாங்காய் சீசன் களை கட்டிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை கிராமங்களான தளிஞ்சி, மாவடப்பு, குழிப்பட்டி, குருமலை, பூச்சி கொட்டான் பாறை உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் ஏராளமான வடுமாங்காய் மரங்கள் உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலையில் நிலவும் தட்பவெட்ப நிலைக்கேற்ப வேறு எங்கும் இல்லாத அளவில் வடுமாங்காய் மரங்கள் இங்கு உள்ளன. சித்திரை மாதத்தில் சீசன் துவங்கும் நிலையில் தற்போது வடு மாங்காய் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது.

நாளொன்றுக்கு ஒரு டன் வரையில் இங்குள்ள மலை வாழ் மக்களால் வடு மாங்காய்களை கீழே கொண்டு வந்து, உடுமலை நகரின் முக்கிய வீதியான தளி ரோட்டில் மலை போல் விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர்.

கிலோ 100 ரூபாய் வரை இந்த வடுமாங்காய் விலை போகிறது. இதைப் பறித்துக் கொண்டு வரும் மலைவாழ் மக்கள் நல்ல வியாபாரம் கிடைப்பதாகவும் லாபம் கிடைப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.



கோடை காலத்தில் கிடைக்கும் இந்த வடுமாங்காய் பார்ப்பதற்கு மிக அழகாகவும் மிகச்சிறியதாகவும் இருக்கும். நல்ல புளிப்பு சுவையுடன் இருப்பதால் இந்த வடுமாங்காய்களை ஊறுகாய் செய்து வைப்பதன் மூலம் மாதக்கணக்கில் கெடாமல் இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

தயிர் சாதத்திற்கும் மற்ற சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள ருசியான ஒரு வகை உணவாகும். தயிர் சாதத்திற்கும் மாவடுவிற்கும் மயங்காதவர்கள் யாரும் இல்லை. மாவடு ஊறுகாய் என்று சொன்னாலே நாக்கில் எச்சில் ஊறும் என கூறப்படுவதுண்டு.

அப்படிப்பட்ட வடுமாங்காய் தற்போது உடுமலை பகுதியில் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...