உடுமலையில் களைகட்டியது வடு மாங்காய் சீசன் - விற்பனை அமோகம்!

திருப்பூர் உடுமலையில் வடுமாங்காய் சீசன் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில் நாள் ஒன்று சுமார் ஒரு டன் அளவிலான மாங்காய் விற்பனைக்கு வருவதாகவும், வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வடு மாங்காய் சீசன் களை கட்டிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை கிராமங்களான தளிஞ்சி, மாவடப்பு, குழிப்பட்டி, குருமலை, பூச்சி கொட்டான் பாறை உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் ஏராளமான வடுமாங்காய் மரங்கள் உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலையில் நிலவும் தட்பவெட்ப நிலைக்கேற்ப வேறு எங்கும் இல்லாத அளவில் வடுமாங்காய் மரங்கள் இங்கு உள்ளன. சித்திரை மாதத்தில் சீசன் துவங்கும் நிலையில் தற்போது வடு மாங்காய் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது.

நாளொன்றுக்கு ஒரு டன் வரையில் இங்குள்ள மலை வாழ் மக்களால் வடு மாங்காய்களை கீழே கொண்டு வந்து, உடுமலை நகரின் முக்கிய வீதியான தளி ரோட்டில் மலை போல் விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர்.

கிலோ 100 ரூபாய் வரை இந்த வடுமாங்காய் விலை போகிறது. இதைப் பறித்துக் கொண்டு வரும் மலைவாழ் மக்கள் நல்ல வியாபாரம் கிடைப்பதாகவும் லாபம் கிடைப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.



கோடை காலத்தில் கிடைக்கும் இந்த வடுமாங்காய் பார்ப்பதற்கு மிக அழகாகவும் மிகச்சிறியதாகவும் இருக்கும். நல்ல புளிப்பு சுவையுடன் இருப்பதால் இந்த வடுமாங்காய்களை ஊறுகாய் செய்து வைப்பதன் மூலம் மாதக்கணக்கில் கெடாமல் இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

தயிர் சாதத்திற்கும் மற்ற சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள ருசியான ஒரு வகை உணவாகும். தயிர் சாதத்திற்கும் மாவடுவிற்கும் மயங்காதவர்கள் யாரும் இல்லை. மாவடு ஊறுகாய் என்று சொன்னாலே நாக்கில் எச்சில் ஊறும் என கூறப்படுவதுண்டு.

அப்படிப்பட்ட வடுமாங்காய் தற்போது உடுமலை பகுதியில் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...